Header Ads



தங்க நகை­களை கொள்­ளை­யிட்டு, தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

தனது பக்தை ஒரு­வரின் வீட்­டுக்கு சென்­றி­ருந்த போது அங்­கி­ருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு ஒரு­வரை  ரிதி­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தான் ஏற்­க­னவே வசித்து வந்த விகாரை மூடப்­பட்­ட­தாக தெரி­வித்து வெவ்­வேறு விகா­ரை­களில் தங்கி வந்­தி­ருந்த பிக்கு ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

இவ்­வாறு அவர் இடம்­பெ­யர்ந்­தி­ருந்து கடந்த ஒரு மாத கால­மாக கிரி­பத்­கல்ல, கந்தே கம பகு­தி­யி­லுள்ள விகா­ரை­யொன்றில் தங்­கி­யி­ருந்த நிலையில் அக்­
கி­ரா­மத்­தி­லுள்ள மக்கள் அவ­ருக்கு தேவை­யான உணவு மற்றும் ஏனைய வச­தி­களை செய்து கொடுத்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு கடந்த 5ஆம் திகதி இந்த பிக்கு தான் தங்­கி­யி­ருந்த விகா­ரைக்கு அரு­கி­லுள்ள வீடொன்­றி­லி­ருந்த தனது பக்­தை­யொ­ரு­வரின் அழைப்பின் பேரில் அவ­ரது வீட்­டுக்கு சென்­றுள்ளார்.

அதன் போது அவ்­வீட்­டி­லி­ருந்த பெண், பிக்­குவை வீட்­டினுள் அமரச் செய்து அவரை சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக வர­வேற்­ப­தற்கு தனது வீட்­டிக்கு வெளியில் வெற்­றிலை பறித்து வர சென்­றுள்ளார்.

அவ்­வே­ளையில் வீட்­டி­லுள்ள அறை ஒன்­றுக்குள் நுழைந்து அங்­கி­ருந்த அலு­மாரி ஒன்றை திறந்த சந்­தேக நப­ரான பிக்கு, அதி­லி­ருந்த நகைப்­பெட்­ட­க­மொன்றை கள­வாடி அவ்­வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து குறித்த வீட்டார் மேற்­கொண்ட முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான  பிக்கு கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

இவ்­வி­சா­ர­ணை­களின் மூலம் பெறப்­பட்ட  வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் பிக்­குவின் காத­லி­யென கூறப்­படும் நாவுல பிர­தே­சத்தை சேர்ந்த 52 வய­தான பெண்­ணொ­ரு­வரும், மாத்­தளை நக­ரி­லுள்ள நகை வர்த்தகரொருவரும் திருட்டு நகைகளை வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டி ருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 comments:

  1. Sri Lanka Defence: மஞ்சள் சாலவையை போத்திக்கொண்டு அதிகமான குற்றங்கள் செய்யப்படுகின்றன.
    ஆகவே மஞ்சள் சாலவையை தடை செய்தால் நல்லம்தானே பிரதமரே!

    ReplyDelete
  2. அபாயாவை தடை செய்ய கூக்குர இடும் காவிகள் உடனடியாக இவ்வாறான மஞ்சள் காவிகலை தடை செய்ய வேண்டும் அதற்க்கு யாரும் பாதை யாத்திரை போக மாட்டார்களா? காவிகளால் நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சியையாக இருக்கிறது.பிக்குவுக்கு பெண் என்றால் பிடிக்காது அப்படி இருந்தும் காதல் வேற தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய பிக்கு கொள்ளையில் ஈடு பட்டுள்ளார் இரண்டு குற்றத்துக்கும் சேர்த்து அரபு நாட்டு சட்டத்தின்படி கையையும் கழுத்தையும் வெட்ட வேண்டும் .இதில் எதை முதலில் வெட்ட வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.