Header Ads



பிக்குவுக்கு சாராயம் கொடுத்து, பாலியல் வல்லுறவு செய்து, வீடியோ எடுத்து, கப்பம் பெற்றவர்கள் கைது..!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

அநு­ரா­த­புரம் கல்­னேவ பிர­தேச விகாரை ஒன்றின் பிக்கு ஒரு­வரை போதை­ய­டையச் செய்து அவரை இயற்­கைக்கு மாறான வகையில் பாலியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி, அக் காட்­சியை வீடியோ செய்து அவ­ரிடம் 10 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபாவை கப்­ப­மாக பெற்ற சந்­தேக நபர்கள் இரு­வரை கல்­னேவ பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

ஒரு மாதத்­துக்கு முன்­பாக மேற்­படி சந்­தேக நபர்கள் இரு­வரும் இந்தப் பிக்கு வசித்து வரும் விகா­ரைக்கு சென்று அவ­ருக்கு அதி­க­ள­வான மது­பா­னத்தை கொடுத்து பிக்­குவை போதையின் உச்­ச­நி­லைக்­குள்­ளாக்கி இயற்­கைக்கு மாறான வகையில் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தோடு அதனை வேறொ­ரு­வரைக் கொண்டு வீடி­யோ­வாக பதி­வு­செய்­துள்­ளனர்.

பின்னர் இவ்­வீ­டி­யோவை இணை­யத்தில் பதி­வேற்­று­வ­தாக இப்­பிக்­குவை அச்­சு­றுத்தி அவ­ரி­ட­மி­ருந்து முதலில் 1 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா­வினை கப்­ப­மாக பெற்­றுள்­ளனர்.

அதன்­பின்னர் மீண்டும் பிக்­குவை அச்­சு­றுத்தி இரு தவ­ணை­களில் மொத்­த­மாக 9 இலட்சம் ரூபாவை கப்­ப­மாக பெற்­றுள்­ளனர்.இந்­நி­லையில் கடந்த 23 ஆம் திகதி மீண்டும் கப்­ப­மாக 7 இலட்சம் ரூபா­வினை கோரி பிக்­குவை  தொந்­த­ரவு செய்­துள்­ளனர்.

சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக குறித்த பிககு கல்­னேவ பொலிஸ் நிலை­யத்தில் இச்­சம்­ப­வத்தை தெரி­வித்து முறைப்­பாடு செய்­துள்ளார்.

அதற்­க­மைய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.