Header Ads



பாராளுமன்றத்தில் மோடிக்கு, உவைசியின் விளாசல் (வீடியோ)


மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார்.

குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது மட்டும் உங்களுக்கு அகுமானதா? எனக் கேட்டதும் அங்கு அமர்ந்திருந்த பாஜகவினருக்கு வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டது

மேலும் மோடியின் சமீபத்திய வசமான ”என்னை சுடுங்கள் அவர்களை விட்டு விடுங்கள்” என்பது குறித்து பேசிய உவைசி:

பிரபல இந்தி பட வசனத்தை பேசியுள்ள மோடி ஒன்றை தெளிவு படுத்தியுள்ளார், ஆட்சி அமைக்க வேண்டும் எனில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதை மோடி இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.