Header Ads



பொய்களை நம்புவதற்கு, மக்கள் கழுதை கூட்டங்கள் அல்ல - சந்திரிக்கா


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணத்தை அரசாங்கத்திற்கு கீழ் கொண்டு வந்தது தன்னுடைய அரசாங்கமே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் 75 வீதத்தை தன்னுடைய அரசாங்கமே நிறைவு செய்ததாகவும், தான் நிறைவு செய்ததில் எஞ்சிய 25 சதவீதத்தையே மகிந்த நிறைவு செய்தார் என்றும் சந்திரிக்கா இந்த வாரம் ஊடகங்களிடம் விமர்சித்திருந்தார்.

இவருடைய இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ,

போரை நான் வென்றேனா? முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வென்றாரா என்பது மக்களுக்குத்தான் தெரியும். ஏனெனில் மக்களே சிறந்த நீதிபதிகள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சந்திரிக்கா,

“இதை எப்படி மறுக்க முடியும்? பொய்களை மட்டுமே நம்புவதற்கு எமது மக்கள் கழுதை கூட்டங்கள் அல்ல, என்னுடைய அரசாங்கத்தின் கீழ் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டன என கூறியுள்ளார்.

1 comment:

  1. சகோதரியே, வடகிழக்கில் வாழும் எங்களுக்குத்தெரியும் உண்மையான நிலை, நீங்கள் எங்களை கழுதைகள் என நினைக்காவிட்டால் சரிதான்.

    ReplyDelete

Powered by Blogger.