Header Ads



என்னை பற்றிய, இரகசியம் என்ன - மைத்திரியிடம் கேட்கும் கீதா

ஜனாதிபதியிடம் இருக்கும் தன்னை பற்றிய இரகசியம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தால், இதுவரை வெளியிடாது மறைத்து வைத்திருக்கும் இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த இரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் காலம் முழுவதும் வீதியில் நடந்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இது குறித்து கருத்து வெளியிடும் போதே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட கீதா குமாரசிங்க, தன்னிடம் வெளியிட வேண்டிய சில தகவல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.