Header Ads



பள்­ளி­வா­சல்­களில் என்ன நடக்­கி­றது, என அறிய சந்­தர்ப்பம் - சர்­வ­தேச மாநாட்டில் ரிஸ்வி முப்தி


-விடிவெள்ளி ARA.Fareel-

பல்­லின மக்கள் வாழும்  இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ரான  முஸ்­லிம்கள் எவ்­வாறு ஏனைய  இன மக்­க­ளுடன்  சமா­தான சக­வாழ்வு வாழ­வேண்­டு­மென அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உலமா சபை  முஸ்லிம் சமூ­கத்தை  அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அதற்­க­மைய  இலங்கை  முஸ்­லிம்கள் அனைத்து இன­மக்­க­ளு­டனும்  நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ்­கி­றார்கள். இலங்கை, முஸ்­லிம்­களின் தாய் நாடு என்­பதில் நாம் உறு­தி­பூண்­டுள்ளோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். 

நேற்­றுக்­காலை அலரி மாளி­கையில் நடை­பெற்ற, முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும், எனும் தலைப்­பி­லான உலக முஸ்லிம் லீக்கின்  சர்­வ­தேச  இஸ்­லா­மிய  மாநாட்டில்  கலந்து கொண்டு  உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு  தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது,

இஸ்லாம் சமா­தா­னத்­துக்கும், சக­வாழ்­வுக்­கு­மான ஓர் மார்க்­க­மாகும். ஏனைய  மதங்­க­ளையோ, மதங்­களை அனுஷ்­டிப்­ப­வர்­க­ளையோ நிந்­திக்­கவோ, துன்­பங்­களை விளை­விக்­கவோ கூடாது என குர்ஆன் மற்றும் ஹதீஸில்  தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு  நிந்­தனை செய்தால் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என அல்லாஹ் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளான். 

முஸ்­லிம்கள் எவ்­வாறு ஏனைய  இனத்­த­வ­ருடன் சமா­தா­ன­மாக சக­வாழ்வு வாழ வேண்டும் என அகில இலங்கை žஜம்­இய்­யத்துல் உலமா சபை 2012 இல் பிர­க­டனம்  ஒன்­றி­னையும்  வெளி­யிட்­டுள்­ளது. நாட்­டி­லுள்ள 2700 இமாம்­களும் இந்த ஒற்­றுமை மற்றும் சக­வாழ்­வுக்­கான பிர­க­ட­னத்தைப் பின்­பற்­று­கி­றார்கள்

நீண்­ட­கால யுத்­தத்தின் பின்பு  இந்­நாட்டில் சமா­தானம் மலர்ந்­துள்­ளது. இதனைக்  கட்­டிக்­காப்­பது அனைத்து இன மக்­க­ளி­னதும் கட­மை­யாகும். 

எமது பள்­ளி­வா­சல்­களில் என்ன நடக்­கி­றது என்­பதை  அறிந்து  கொள்ள  ஏனைய  இன­மக்­க­ளுக்கும்  சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.  அதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் ஏனைய இனத்­த­வர்கள் இஸ்­லாத்தைப் பற்றி கொண்­டுள்ள தவ­றான அபிப்­பி­ரா­யங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடியும் என உலமா சபை கரு­து­கி­றது. 

பள்­ளி­வா­சல்­களில் அதான் கூறு­வ­தற்­காக உப­யோ­கிக்­கப்­படும் ஒலி­பெ­ருக்­கிகள் அதிக சப்­தத்­துடன் அல்­லாது உப­யோ­கிக்­கப்­பட  வேண்டும் என உல­மா­சபை தனது சக­வாழ்­வுக்­கான  பிர­க­ட­னத்தில் குறிப்­பிட்­டுள்­ளது. மற்றும் குர்பான் போன்ற  விட­யங்­களில் மாடுகள் அறுக்­கும்­போது ஏனைய இன மக்­களின் உணர்­வுகள்  மதிக்­கப்­பட  வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­துள்­ளது. 

இலங்­கையில் முஸ்­லிம்கள் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாக ஏனைய  பெளத்த, இந்து, கிறிஸ்­தவ  மக்­க­ளுடன்  ஒற்­று­மை­யாக சமா­தான சக வாழ்வு  வாழ்­கி­றார்கள். இலங்கை முஸ்­லிம்­களின்  தாய்­நாடு  இலங்­கை­யாகும்.  நாம் பெரும்­பான்மை மக்­க­ளு­டனும், அர­சாங்­கத்­து­டனும் இணைந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்து  வரு­கிறோம். 

அமைக்­கப்­படும் ஒவ்­வொரு  அர­சாங்­கத்­துக்கும் ஆத­ரவு வழங்­கி­வ­ரு­கிறோம். இலங்கை அர­சாங்­கமும்  முஸ்­லிம்­க­ளுக்கு பல சலு­கைகள் வழங்­கி­யுள்­ளது. வக்பு சபை, முஸ்லிம் தனியாள் சட்டம், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், முஸ்லிம் விவ­கார  அமைச்சு, முஸ்லிம்  பாட­சா­லைகள், இஸ்­லா­மிய வங்கி என்­ப­ன­வற்றைக் குறிப்­பிட்டுக் கூறலாம். 

நாட்­டு­மக்கள் அனை­வரும் அர­சாங்­கத்தால் சம­மாக கரு­தப்­ப­டு­கி­றார்கள். நல்­லாட்சி அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் தேசிய  ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் வளர்ப்­ப­தற்­காக தனி­யான அமைச்சு ஒன்று  உரு­வாக்­கப்­பட்டு அது செயற்­பட்டு வரு­கி­றது. நாட்டு மக்­களின் ஐக்­கி­யத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பாடே இது­வாகும்.  

நல்­லாட்சி  அர­சாங்கம் அர­சி­யல­மைப்பில் சில திருத்­தங்­க­ளையும் உள்­வாங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளது. 

இலங்­கைக்கும்  சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டையில் நெருங்­கிய உறவு இருக்­கி­றது. உல­க­முஸ்லிம் லீக்கின் உத­வி­யுடன் இந்த உறவு மேலும்  பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களின் மூலமும், வேலை­வாய்ப்­புகள் மூலமும் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வுகள் மேலும்  வலுவடைகின்றன. எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது சவூதி அரேபியா நிதியுதவி வழங்கி எம்மை  அரவணைத்ததை நாம்  நினைவு கூருகிறோம். 

இந்நாட்டில் தேசிய ஐக்கியத் தையும், நல்லிணக்கத் தையும் உருவாக்குவதற்கு  ஜனாதிபதியும் பிரதமரும் முன்னின்று உழைக்கிறார்கள். இருபெரும்பான்மைக் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒன்றிணைந்துள்ளன. நாம் இனமத பேதமின்றி நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்ல ஒன்றிணைவோம் என்றார். 

No comments

Powered by Blogger.