ஜம்மியத்துல் உலமாவுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் சிங்கள ராவய பாராட்டு..!
-விடிவெள்ளி ARA.Fareel-
முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏனைய இனமக்களின் மனதைப் புண்படுத்தாதவாறு நிறைவேற்றிக் கொள்வதில் சிங்கள ராவயவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏனைய இனமக்களின் மனதைப் புண்படுத்தாதவாறு நிறைவேற்றிக் கொள்வதில் சிங்கள ராவயவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குர்ஆன் கடமையை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இது விடயத்தில் தலையிட்டு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குர்பான் கடமை நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் அமைச்சர்களும் உலமா சபையும் குர்பான் கடமை தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது சமயத் தலைவர்களதும் அரசியல் தலைவர்களதும் கடமையாகும்.
முஸ்லிம்கள் தமது குர்பான் கடமையை சட்டங்களை மீறி பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் மேற்கொண்டால் அது ஏனைய இனத்தவரின் உணர்வுகளைப் பாதிக்கும்.
இதனால் முறுகல் நிலை உருவாகலாம் என்றே சிங்கள ராவய சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி செயலாளர்களையும் ஆணையாளர்களையும் குர்பான் கடமையின் போது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது என்றார்.
என்ன ஓநாய் அழுகின்றது ஆடு நனைகின்றது என்று ?
ReplyDeleteசொல்பவரைப் பார்க்காமல் விமர்சிப்பதென்றால்......
ReplyDeleteநல்ல கருத்து.
நம் சமூகம் பிழை விடும் இடங்களை கண்டு பிடித்து அவற்றில் இருந்து மீண்டு விட்டால் நம் இருப்பு பலப்படும்
இதுவும் ஒரு வகையில் சரிதான் அவர்கள் தடுக்கவில்லை சட்டத்தை மதிக்கச் சொல்கின்றார்கள்,
ReplyDeleteமாடுகளை அறுக்க வேனாம் என்று முழுமையாக கூறவில்லை, சொல்லப்போனால் அரபு நாடுகளிலும் சட்டமுலம்தான் அறுக்கப்படுகின்றது,
Let us keep our personal feelings to ourselves and correct our side.
ReplyDeleteகுர்பான் கால்நடைகள் முறையாக பணம் கொடுத்து வாங்கப்பட்டு , உரிய முறையில் மனிதாபிமான முறையில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு , அனுமதிக்கப்பட்ட முறையில் அறுக்கப்படுவதை உறுதி செய்ய ஒரு தர கட்டுப்பாடு முறையை,ஹலால். ஆரம்பிக்கலாமே !
ReplyDeleteநாம் எமது விடயங்களை சரியாக அடுத்தவரைப் அசௌகரியப்படுத்தா வண்ணம் மேற்கொண்டால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். செய்திக்கான புகைப்படம் தவறு என நினைக்கின்றேன்.
ReplyDeleteRespect the Law of the Land take your cattle to the abotaire the official slaughter house and fulfill your kurbani.
ReplyDelete