Header Ads



ஒலிம்பிக்கில் கட்டார் நாட்டு சார்பில், பங்கேற்ற துளசி தருமலிங்கம்


றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

ஜேர்மனியில் வசிக்கும் புலோலியைப் பூர்வீகமாகக் கொண்ட துளசி தருமலிங்கம் என்ற குத்துச்சண்டை வீரர், இம்முறை ஒலிம்பிக் போட்டியில், கட்டார் அணியின் சார்பில் பங்கேற்றார்.

கடந்தவாரம் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரீன வீரரை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார்.

நேற்று அவர் 64 கிலோ  எடை ஆண்கள் இலகு வெல்டர் பிரிவின் 32 ஆவது சுற்று ஆட்டத்தில், மொங்கோலிய வீரர், சின்சோரிக் பாட்டார்சுக்குடன் மோதினார்.

மூன்று சுற்றுக்களாக நடந்த இந்தப் போட்டியில், மூன்று சுற்றுக்களிலும், மொங்கோலிய வீரரே வெற்றி பெற்றார்.

இதனால் 3-0 என்ற அடிப்படையில் துளசி தர்மலிங்கம் தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.



No comments

Powered by Blogger.