Header Ads



மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யாவுக்கு புதிய தொழில்நுட்ப பீடம் - மைத்திரி திறந்துவைத்தார்


காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தினை இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார். 

இன்று முற்பகல் பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை பாடசாலை மாணவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். 

அதன் பின்னர் பெயர்ப்பொறி கல்லினை திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப பீடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள் அங்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். 

கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பாடத் துறையில் காலி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மல்ஹரஸூலியா மத்திய கல்லூரி மாணவி எம்.என்.பாரா நிபிலா ஜனாதிபதி அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 




No comments

Powered by Blogger.