Header Ads



மைத்திரிபால இலஞ்ச மோசடியில் ஈடுபட்டார் - அவுஸ்திரேலிய ஊடகம், மறுக்கிறது ஜனாதிபதி செயலகம்

2009ஆம் ஆண்டில் அமைச்சராக செயற்பட்ட சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மோசடியில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன.

எனினும் அந்த குற்றச்சாட்டை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

2009ஆம் ஆண்டு மகாவலி அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலிய நிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்கியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் ஜனாதிபதியால் பெறப்பட்டுள்ளதா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.