Header Ads



என்னை நோக்கி கல் எறியும்போது, பொலிஸார் வேடிக்கைப் பார்த்தனர் - அமைச்சர் ஜோன் சீற்றம்

வத்தளையில் தமிழ் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டச் சென்ற போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை நோக்கி கல் எறியும் போது பொலிஸார் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே பொலிஸாரின் இந்த நடவடிக்கை தொடர்பில் முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகரவிடமே இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் குழப்பங்களை விளைவித்த நபர்களை கட்டுப்படுத்தவோ,ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தமிழர் ,முஸ்லிம்கள் என்றால் சில பொலீஸாரின் நடவடிக்கை அப்படித்தான் உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.