Header Ads



ஒம்ரானின் சகோதரனுடைய, உயிர் பிரிந்தது


அலெப்போ நகர வான்வழித் தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒம்ரான் டாக்னீஷின் மூத்த சகோதரன், அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார்.

அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசுப் படையினர் கடந்த புதன்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்த 4 வயது ஒம்ரான் டாக்னீஷின் படம், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வந்த ஒம்ரானின் மூத்த சகோதரன் அலி (10 வயது) உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது.

No comments

Powered by Blogger.