Header Ads



கொழும்பின் அடுத்த மேயரா ரோசி..?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவை கொழும்பு மாநகரசபை மேயராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொழும்பு மாநகரசபை மேயா் ஏ.ஜெ.எம். முஸம்மிலுக்கு பதிலாகவே இவர் நியமிக்கப்பட உள்ளார்.

அத்துடன் மலேசியாவிற்கான புதிய உயர் ஸ்தானிகராக ஏ.ஜெ.எம். முஸம்மில் நியமிக்கப்பட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ஸ்தானிகராக நியமிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை என ஏ.ஜெ.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரோசி சேனாநாயக்க பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.