Header Ads



முஸ்லிம்களை மஹிந்த தலைமையிலான, பொது எதிரணியில் ஒன்றுசேருமாறு அழைப்பு


முஸ்­லிம்கள் தங்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை ஸ்தீரப்­ப­டுத்திக் கொண்டு இந்­நாட்டில் பாது­காப்­பாக வாழ்­வ­தற்கு இணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் கைகோர்க்க வேண்­டு­மென இணைந்த எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

நாட்டில் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதம் தலை­தூக்­கி­யுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

நல்­லாட்சி என்று கூறிக்­கொள்ளும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்­திலும் இன­வாதம் மேலோங்கி வரு­கி­றது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்­துக்கு உத்­த­ர­வா­த­மி­ருந்­தது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வ­தத்­தி­லி­ருந்தும் முஸ்லிம் மக்கள் பாது­காக்­கப்­பட்­டனர்.

புலிப் பயங்­க­ர­வா­தத்தை அழித்­ததன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பு கிடைத்­தது. இன்று முஸ்­லிம்­களின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. அர­சாங்கம் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கே நிவா­ர­ணங்­க­ளையும் பல்­வேறு சலு­கை­ளையும் வழங்கி வரு­கி­றது.

ஜன­நா­யகம் இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் பறிக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம்  வேண்­டு­மென்றே கால தாமதம் செய்து வரு­கி­றது.

ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் முஸ்­லிம்கள் தமது பொரு­ளா­தா­ரத்தில் ஸ்தீரத்­தன்­மை­ய­டை­வ­தற்கும் முஸ்­லிம்கள் இணைந்த எதிர்க்­கட்­சியின் பக்கம் ஒன்­றி­ணைய வேண்டும்.

புலி­களை ஆத­ரிக்கும் இந்த அர­சாங்­கத்­தினால் ஒரு­போதும் முஸ்­லிம்­களின் பாது­காப்­பினை உறு­தி­செய்ய முடி­யாது. இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னா­லேயே முஸ்­லிம்கள் இந்­நாட்டில் பீதி­யின்றி வாழ்­வ­தற்கு உறுதி வழங்க முடியும்.

காணா­மல்­போனோர் அலு­வ­லகம் என்ற பெயரில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களே மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

விசா­ர­ணை­க­ளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதனால் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படவுள்ளார்கள். இதனால் காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு இணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்பினைத் தெரிவிக்கிறது என்றார்.

3 comments:

  1. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமாம் பழமொழி இந்த லூசுகளின் கதைகளை கேட்டால் வெயிறு வலிக்க வலிக்க சிரிக்க வேண்டியுள்ளது

    ReplyDelete
  2. All ready aswar, sattar available I think this enough

    ReplyDelete
  3. This guy is a serious crack. Expired

    ReplyDelete

Powered by Blogger.