"அரசாங்கத்தின் ஒரு முடியை கூட, அசைக்க முடியவில்லை"
ஒரு வருடத்தை கூட பூர்த்தி செய்யாதிருக்கும் அரசாங்கத்திற்கு சிறிய குழு சவால் விடுத்து வருவதாகவும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப பாரிய பாத யாத்திரை செல்ல போவதாக கூறியதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இன்று இதனை கூறியுள்ளார்.
சில நாட்களாக நடந்து வந்து, பெரிய கோஷங்களை எழுப்பி, அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக கூறினர். ஆனால் அரசாங்கத்தின் ஒரு முடியை கூட அவர்களால் அசைக்க முடியவில்லை எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வீதியில் இறங்கும் போது இதனை விட அதிகமான கூட்டம் கூடும்.
ஆனால் பாத யாத்திரைக்கு மக்கள் ஆதரவு வழங்கியதை காண முடியவில்லை. ஆனால் அனைத்து சந்திகளிலும் அதிவிசேட சாராய அனுசரணையை எம்மால் காண முடிந்தது.
நிழல் அமைச்சரவையின் வெளிவிவகார அமைச்சருக்கு தற்போது, ஆடல் பாடல் அமைச்சையும் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment