யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில், விஷேட நடமாடும் சேவை
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மீள்குடியேற்றத்திற்கான விஷேட நடமாடும் சேவை எதிர்வரும் 2016-ஆகஸ்ட் 20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி அறிவித்துள்ளார்.
இதில் புதிய மீள்குடியேற்றப் பதிவுகள்,காணி அற்றோர் காணிகளை கோருவதற்கான பதிவுகள்,வீட்டுத்திட்டத்திற்கா ன பதிவுகள்,ஆகியவற்றுடன் வாழ்வாதார உதவிகளுக்கான பதிவுகள் யாழ் மாநகரசபை அலுவலகத்தின் சோலைவரி மதிப்பீடுகள் மற்றும் வீடமைப்பிற்கான அனுமதி தொடர்பிலான பதிவுகளும் இந்நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவையை துரித கதியில் மேற்கொள்வதற்கு அரசாங்க அதிபரின் ஊடாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்த விஷேட நடமாடும் சேவை பயன்படுத்திக்கொள்தல் வேண்டும் என்று அனைத்து பள்ளிவாசல்களின் ஊடாக அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment