மைத்திரியின் மகள், தேர்தலில் போட்டியா..?
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வடமத்திய மாகாண சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா போட்டியிடலாமென்று கூறப்படுகிறது.
வடமத்திய மாகாணத்துக்குட்பட்ட பொலநறுவை மாவட்டத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியல் ஊடாக மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
மாகாண சபை நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றெடுக்கும் பட்சத்தில் மாகாண முதலமைச்சராக சதுரிக்கா நியமிக்கப்படுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment