Header Ads



இலங்கை ஜனாதிபதி அனுப்பிய, கடிதம் பரீசீலிக்கப்படுகிறது - சவூதி அறிவிப்பு


இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கு­வது தொடர்பில் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இது தொடர்பில் விரைவில் அறி­விக்­கப்­ப­டு­மெ­னவும் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்சர், முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­முக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார்.

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு அமைச்சர் ஹலீம், சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சவூதி மன்­ன­ருக்கும் வேண்­டுகோள் விடுத்து கடி­தங்கள் அனுப்பி வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை, இவ்­வ­ருடம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட புதிய கோட்டா முறை மூலம் பாதிக்­கப்­பட்ட ஹஜ் முக­வர்கள் சிலர் அமைச்சர் ஹலீமை அமைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

மேல­திக கோட்டா இலங்­கைக்கு வழங்­கப்­பட்டால் பாதிக்­கப்­பட்ட ஹஜ் முக­வர்­க­ளுக்கு கோட்டா பகி­ரப்­பட வேண்­டு­மெ­னவும் அவர்கள் அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இலங்­கைக்கு மேல­திக கோட்டா கிடைத்தால் தாம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி­வரும் ஹஜ் முக­வர்கள் தொடர்பில் பரி­சீ­லிக்­கப்­ப­டு­மெ­னவும் இவ்­வ­ருட ஹஜ் கோட்டா, ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மற்றும் முக­வர்­களின் நலன் கரு­தியே ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தெ­னவும் எந்­தவோர் ஹஜ் முக­வர்­க­ளுக்கும் அநீதி இழைக்கப்படவில்லையெனவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

-விடிவெள்ளி ARA.Fareel-

No comments

Powered by Blogger.