Header Ads



தனது பலத்தை, அதிகரிக்கும் யானை..!

இலங்கையின் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பேரை கட்சி உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் வேலைத்திட்டம் வெற்றிக்கரமாக முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தை முன்னிட்டு 30 இலட்சம் பேருக்கு புதிதாக கட்சி உறுப்புரிமை வழங்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இது வரையில் 8 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கட்சி இணைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கட்சி உறுப்புரிமைக்கான 20 ரூபா பற்றுச்சீட்டை 4 இலட்சத்து 89 ஆயிரம் பேர் கொண்டுள்ளனர். அத்துடன் வரலாற்றில் முதல் தடையாக இணையத்தளம் ஊடாக விநியோகிக்கப்பட்ட கட்சி உறுப்புரிமை அட்டையினை ஒரு இலட்சத்து 12 ஆயிரம் பேர் கொண்டுள்ளனர். இலங்கையர்களை போன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.