Header Ads



களுபோவில வைத்தியசாலையில் பெண் மீது, வைத்தியர் துஷ்பிரயோகம் - உடனடி விசாரணைக்கு உத்தரவு

தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் (களுபோவில) வைத்தியப் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பரிந்துரைக்கு அமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால, குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இது குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அலுவலகத்தின் வைத்தியரால் சம்பந்தப்பட்ட பெண் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.