பாத யாத்திரை, பாரிய தோல்வியடைந்துள்ளது - சந்திரிக்கா
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
வியங்கொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பாத யாத்திரை வெற்றியாக அமைய வாய்ப்பு இல்லை. நாம் இன்று அது பற்றி பேச வரவில்லை.
நான் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்த காரணத்தினால் பண்டாரநாயக்க சமாதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இல்லாவிட்டால் பாத யாத்திரை நடத்தியவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்.
2010ம் ஆண்டில் சரண குணவர்தனவும், மஹிந்தவின் ஆதரவாளர்களும் இணைந்து சமாதி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த சம்பவம் குறித்து மஹிந்தவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.
எனினும் இதுவரையில் மஹிந்த அதற்கு பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment