Header Ads



தனித்­த­னி­யாக "கோல்" போடும் முயற்­சி...!

- தொகுப்பு:மொஹமட் ரிபாக் -

புத்­தளம் தில்­லை­யடி முஹா­ஜிரீன் அரபுக் கல்­லூ­ரியின் முப்­பெரும் விழா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கல்­லூரி வளா­கத்தில் இடம்­பெற்­றது. இதில் விஷேட பேச்­சா­ள­ராகக் கலந்­து­கொண்ட பேரு­வளை ஜாமியா நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் பிரதிப் பணிப்­ப­ளாரும், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உதவித் தலை­வ­ரு­மான ஏ.சி.அகார் முஹம்மத் (நளிமீ) ஆற்­றிய விஷேட உரையின்தொகுப்பு.

இன்று இலங்­கை­யி­லுள்ள சகல அரபுக் கலா­சா­லை­க­ளையும் உயர்ந்த நிலைக்குக் கொண்­டு­வ­ர­வேண்­டிய ஒரு கடப்­பாடு நம் எல்­லோ­ருக்கும் இருக்­கி­றது. இதற்­காக ஒரு குழுச் செயற்­திட்டம் தேவைப்­ப­டு­கி­றது. எல்­லோ­ரு­மாக இணைந்து செயற்­பட வேண்­டிய நிலை காணப்­ப­டு­கி­றது. கால்­பந்­தாட்டப் போட்­டியில் அந்த அணி வெற்­றி­பெற வேண்டும் என்றால் அந்த அணி­யி­லுள்ள எல்­லோரும் ஒத்­து­ழைக்க வேண்டும். தனித்­த­னியாக கோல் போடு­வ­தற்கு முயற்­சித்தால் நிச்­ச­ய­மாக வெற்­றி­பெற முடி­யாது.

அது­போல இன்று அர­சியல் மட்­டங்­க­ளிலும் சரி, தஃவா மட்­டத்­திலும் சரி, சமூகப் புனர் நிரு­மாண மட்­டங்­க­ளிலும் சரி, எல்­லோரும் நல்­லெண்­ணத்­துடன் தனித்­த­னி­யாக கோல் போடும் முயற்­சியில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். சில கோல்கள் போடப்­ப­டு­கி­றது. ஆனால் அணி வெற்­றி­பெ­று­வ­தற்­கான ஆரோக்­கி­ய­மான அறி­கு­றிகள் தென்­ப­டு­வதாக தெரி­ய­வில்லை. உங்­க­ளுக்கு மத்­தியில் நீங்கள் சர்ச்­சையில் ஈடு­பட வேண்டாம். அவ்­வாறு நீங்கள் சர்ச்­சையில் ஈடு­பட்டால் பல­வீ­ன­ம­டைந்து படு­தோல்வி அடை­வீர்கள் என்று அல்­குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ளது. 

நாம் இலங்கை நாட்டில் வாழ்ந்­து ­கொ­ண்­டி­ருக்­கிறோம். இந்த நாட்டைப் பொறுத்­த­வரை எமது முன்­னு­ரி­மைகள் என்ன, நாம் ஆற்­ற­ வே­ண்­டிய பணிகள் யாவை, எமக்கு முன்­னா­லுள்ள சவால்கள் என்ன என்­பதை நாம் அனை­வரும் அடை­யாளம் கண்டு அவற்­றுக்கு முகம்­கொ­டுக்கும் வகையில் நிகழ்ச்­சித்­திட்­டத்தை செயற்­ப­டுத்த வேண்டும். எனவே, பாரம்­ப­ரிய முரண்­பா­டு­களைப் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­காமல் சமூ­கத்தின் இருப்­போடு, பாது­காப்­போடு, எதிர்­கா­லத்­தோடு சம்­பந்­தப்­பட்ட, எதிர்­கால தலை­மை­களின் இருப்­போடு சம்­பந்­தப்­பட்ட விட­யங்­களில் கவ­னங்­களை செலுத்தத் தவ­றினால் நிச்ச­ய­மாக எமக்கு ஏற்­படப் போகின்ற பாதிப்பை எவ­ராலும் தடுக்க முடி­யாமல் போய்­விடும்.

மூவி­னத்­த­வர்­களும் வாழும் இந்த நாட்டில் எவ்­வாறு வாழ வேண்டும் என்ற கலையை நாம் படிக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளைப் பற்றி, இஸ்­லாத்­தைப் ­பற்றி பல்­வேறு தவ­றான கருத்­துக்கள் கூறப்­ப­டு­கின்­றன. பெண்­களின் ஹிஜாப், இஸ்லாம் தீவி­ர­வாத்தை போதிக்­கின்­றதா? இது­போன்ற எத்­த­னையோ கேள்­விகள் தொடுக்­கப்­ப­டு­கின்­றன. 

எனவே, இவ்­வா­றான கேள்­வி­க­ளுக்கு அழ­காக, ஆக்­க­பூர்­வ­மாக, அறி­வான, தெளி­வான விளக்­கங்­களை சொல்லும் எத்­தனை பேரை நாம் உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம்? இவர்­களை உரு­வாக்க வேண்­டி­யது அரபுக் கலா­சா­லை­களின் கட­மை­க­ளாகும். பட்­டச்­சான்­றிதழ் அல்ல முக்­கியம். தகு­தி­யுள்ள, ஆளு­மை­யுள்ள, மொழி­ வ­ள­முள்ள, எந்த சந்­தே­கத்­திற்கும் தெளி­வான விளக்­கத்தை கொடுக்கும் ஆட்­களை உரு­வாக்கும் மிகப் பெரும் கடப்­பாடு நம் அனை­வ­ருக்கும் இருக்­கி­றது.

எல்­லோரும் விளக்­கத்தை எதிர்­பார்க்­கி­றார்கள். தெளிவை எதிர்­பார்க்­கி­றார்கள். ஆனால் தெளி­வுப­டுத்­தக்­கூ­டி­ய­வர்­களை, இவ்­வா­றான ஆளு­மை­யுள்­ள­வர்­களை நாம் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோமா என்­பது பெரும் கேள்­வி­யா­க­வுள்­ளது. மூத்த உல­மாக்கள், அரபுக் கலா­சா­லையின் நிரு­வா­கிகள், அதி­பர்கள், தன­வந்­தர்கள், புத்­தி­ஜீ­விகள் சிந்­திக்க வேண்டும். ஓதி­ய­வர்கள் ஒரு பக்­கமும், படித்­த­வர்கள் மறு­பக்­கமும் பிரிந்து செல்லும் போக்கு ஆரோக்­கி­ய­மா­னது அல்ல. இந்த இரு சாராரும் இணையும் இடத்­தில்தான் சமூ­கத்­து­டைய வெற்றி இருக்­கி­றது.

ஒரு பக்கம் படித்­த­வர்கள், மறு­பக்கம் ஷரீ­ஆத்­துறை அறி­ஞர்கள், அடுத்த பக்கம் பணம் படைத்­த­வர்கள் இவர்கள் அனை­வரும் கைகோர்க்கும் பட்­சத்­தில்தான் வெற்­றி­யுள்­ளது. இதற்கு ஜாமிஆ நளீ­மி­ய்யா நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.

ஒரு காலத்தில் நளீ­மிய்­யாவை உரு­வாக்­கு­வ­தற்கு மர்ஹூம் நளீம் ஹாஜியார் முன்­வைத்த கருத்து 'என்­னிடம் பணம் இருக்­கி­றது. படிப்பு இல்லை. உங்­க­ளிடம் படிப்பு இருக்­கி­றது. பணம் இல்லை. வாருங்கள் படித்­த­வர்­களும், பணம் படைத்­த­வர்­களும் இணைவோம். இந்த சமூ­கத்தில் ஒரு மாற்­றத்தைக் கொண்டு வருவோம்' என்று கூறினார். இதன் விளை­வுதான் ஜாமி­ஆ நளீ­மிய்­யா­வாகும்.

ஒரு சிறு­பான்மை சமூகம் ஒருபோதும் பல­வீ­ன­மாக இருக்கக் கூடாது. ஐக்­கி­ய­மாக, ஒற்­று­மை­யாக இருக்கும் போது அல்­லாஹ்வின் அரு­ளினால் தொகையில் குறைந்­த­தாக காணப்­பட்­டாலும் பல­மா­ன­தாக காணப்­படும்.  சமூ­கத்தின் ஐக்­கி­யத்­திற்கும், ஒற்­று­மைக்கும் எந்த நேரத்­திலும் தியா­கத்தைச் செய்­வ­தற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இலங்­கையின் அடுத்த சமூ­கங்­க­ளோடு , சம­யத்­த­வர்­க­ளோடு, கரைந்து போகாமல் கலந்து வாழும் கலையை கற்க வேண்டும். அத்­துடன், அரபுக் கலா­சா­லையில் ஷரீஆக் கல்­வி­யோடு, சமூக நல்­லி­ணக்கம் பற்­றியும் கற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். இவை இன்­றைய காலத்தின் தேவை­யாகும்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு ஊடாக 95 வருட வர­லாற்­றிலே முதற் தட­வை­யாக அரபுக் கலா­சா­லை­களில் கல்வி கற்று பட்டம் பெற்று வெளி­யே­றிய இளம் உல­மாக்­க­ளுக்­கான ஒரு பயிற்சி நெறியை ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். அந்த பயிற்சி நெறியில் இந்த இளம் உல­மாக்­களை சம­கா­லத்து சவால்­க­ளுக்­கு முகம்­கொ­டுக்கக் கூடிய, சமூக ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது, சமூக நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது, சக வாழ்வை கட்­டி­யெ­ழுப்­பு­வது, முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் உடன்­பாடு காண்­பது மாத்­தி­ர­மன்றி, இக்­கா­லத்து சவால்­க­ளுக்கு முகம் கொடுக்கக் கூடிய திறன்­களை வளர்த்­துக்­கொள்­வது தொடர்பில் பாடத்­திட்­டங்­களை உள்­ள­டக்கி அவர்­க­ளுக்­கான வழி­காட்­டல்­களை வழங்கி வரு­கிறோம். 

ஏனெனில் எமது அடுத்த தலை­மு­றை­யி­னரை சரி­யான முறையில் வழி­காட்ட வேண்­டிய மிகப் பெரிய பொறுப்பு எமக்கு இருக்­கி­றது. அவர்களது ஒழுக்கம், பண்பாடு, நடத்தை தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறோம். பண்பாட்டு வீழ்ச்சியை உலகம் எதிர்நோக்கியிருக்கிறது.

உலக மயமாக்கலின் விளைவு இளைஞர், யுவதிகள் மத்தியில் பாரிய ஒழுக்க சீர்கேடுகள் பரவி வருகின்றது என்பதை நாம் பார்க்கிறோம். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். எமது இந்த சொற்பொழிவு (பயான்) ஒழுங்கு இந்தக் காலத்து இளைஞர்களுக்கு சரிவராது.

ஒரு மட்டத்திலுள்ளவர்கள்தான் இவற்றை பேசுவார்கள். அதன் பின்னர் இந்தப் பக்கத்தையே பாரக்கமாட்டார்கள். அவ்வாறு வந்தாலும் அவர்களுடைய கைகளில் ஸ்மார்ட் போன்கள்தான் காணப்படும். அவர்கள் வட்ஸ் அப்பில் , பேஸ்புக்கில், வைபரில் இருப்பார்கள். 

இந்த இளைய சமூகத்தை வழிநடாத்துகின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.  எனவே, இலங்கையிலுள்ள சகல அரபுக் கலாசாலைகளும் பொதுவான, காலத்திற்கு தேவையான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இளம் உலமாக்களுக்கு ஆளுமைகளை, திறன்களை, மொழியாற்றலை, தேவையான வழிகாட்டல்களை வழங்கி சம காலத்து சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு வழிசெய்கின்ற மிகப் பெரும் பொறுப்பு நமக்குள்ளது.

ஒவ்வொரு அருளும் அமானிதமாகும். ஆயுள் ஓர் அருள். ஆனால் அது ஓர் அமானிதம். இளமை ஓர் அருள் ஆனால் அது ஓர் அமானிதம். செல்வம் ஓர் அருள் ஆனால் அது ஓர் அமானிதம். பதவி ஓர் அருள் ஆனால் அது ஓர் அமானிதம். மதரஸா ஓர் அருள் ஆனால் அது ஒரு அமானிதம். இந்த அமானிதம் பற்றி நாளை நிச்சயமாக விசாரிக்கப்படுவோம்.

1 comment:

  1. Rightly said we should prioritize our most important issues.. our differences should not be an obstacle in meeting and realization of these important issues..if we not united that will pay the way for the existence threat of this community ..

    ReplyDelete

Powered by Blogger.