Header Ads



வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் - பொலிஸார் தண்ணீர் புகைப்பிரயோகம்

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற இறுதி, ஒருநாள் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மீது பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். 

இறுதிப் போட்டியை பார்வையிடுவதற்கு தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமையால், பெருந்திரளான ரசிகர்கள், குருணாகல்-கொழும்பு பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை களைப்பதற்கே பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.