Header Ads



இந்துத்துவ காவி கும்பல் அட்டுழியம் - முஸ்லிம்களின் கடைகள் சூறை, பள்ளிவாசல் மீது தாக்குதல்

பீகார் மாநிலத்தின் 'சப்ரா' மாவட்டத்தில் நேற்றுமுன்தினம்(06/08/16), பஜ்ரங்தள் குண்டர்கள் முஸ்லிம்களின் கடைகளை சூறையாடி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

சப்ராவை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் முகநூலில் இந்து கடவுளை இழிவுப்படுத்தியதாக கடந்த வெள்ளிகிழமையன்று 'வதந்தி' பரவியது.

இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட பஜரங்தக் அமைப்பை சேர்ந்த குண்டர்கள் அப்பகுதிக்கு வந்தனர்

ஆனால் அந்த வாலிபர் பெங்களூரில் வசிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாளை(சனிக்கிழமை) அனைவரும் கடைகளை அடைக்க வேண்டும் என 'பந்த்'க்கு அழைப்பு விடுத்து பஜ்ரங்தள் குண்டர்கள் கோஷமிட்டனர்.

முஸ்லிம்கள் பெரும்பாலானோர் கடைகளை அடைத்துவிட்டனர், சில டீ கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருந்தன,

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2000-க்கும் மேற்பட்ட இந்துத்துவ கும்பல் மூடி இருந்த கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை கொள்ளையடித்தனர் மேலும் கடைகளுக்கு தீ வைத்து எரித்தனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஹதுவா, தீன்குனியா மற்றும் சஹாப்கஞ் போன்ற பகுதிகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.

தீன்குனியா 'ஜாமியா மஸ்ஜித்' கதவுகள் தீயிட்டு கொளுத்தி அராஜகம் செய்துள்ளனர் மேலும் வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.




1 comment:

Powered by Blogger.