Header Ads



நாட்டில் காற்றுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அநேக பகுதிகளில் எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.