Header Ads



இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து, பிரதமர் ரணில் பெருமிதம்


-விடிவெள்ளி-

1970 களில் பொரு­ளா­தார விடு­த­லைக்­கான முன்­னோ­டி­யாக இஸ்­லா­மிய பொரு­ளா­தா­ரமே இருந்­தது. எனவே  இன்று இஸ்­லா­மிய சமூ­கத்தின் பொரு­ளா­தார முறை­மைகள் தொடர்பில் உலம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இந்­தே­ானே­ஷி­யாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறு­கையில், 

இந்­தோ­னே­ஷியா பல இயற்கை பாதிப்­புக்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ள நிலையில் இன்று நடை­பெறும் இந்த மாநாடு உலக அளவில் முக்­கி­ய­த்துவம் வாய்ந்தது. எவ்­வா­றா­யினும் இஸ்­லா­மிய சமூகம் செறிந்து வாழும் நாடுகள் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தென்­கி­ழக்­கா­சியா வரை பரந்து காணப்­ப­டு­கின்­றது. அவற்றில் பொரு­ளா­தார வளங்கள் செறி­வாக காணப்­ப­டு­கின்­றன.

அதனால் பல­த­சாப்­தங்­க­ளாக சக்­தி­மிக்க பொரு­ளா­தார கட்­ட­மைப்­பாக இஸ்­லா­மிய நாடுகள் காணப்படுகின்றன. 

பல்­வேறு மதங்கள், இனங்கள் வாழும் இலங்கைத் தீவி­லி­ருந்து நான் இஙகு வந்­துள்ளேன். இலங்கை பெரும்­பான்­மை­யாக சிங்­க­ள­வர்­களும் இந்து, கிறிஸ்­தவம், இஸ்லாம் மக்­களின் ஒன்­றி­ணைந்த வாழ்க்கை முறைமையை கொண்டுள்­ளது. இன, மத வேறு­பாட்டை குறைத்துக் கொண்டு ஒற்­று­மை­யான நிலைப்­பாட்­டுக்கு நாம் வர பொரு­ளா­தார உற­வு­களே உறு­து­ணையாக இருந்­தது. 

பட்­டுப்­பா­தை­யிலும் இந்து சமுத்­திர வளா­கத்­திலும் அரே­பிய வியா­பா­ரிகள் நிறைந்­தி­ருப்­பதை நாங்கள் காணலாம். 16 ஆம் நூற்­றாண்டு வரை­யிலும் வலு­வான வர­லாற்று வளர்ச்­சியை அடை­வ­தற்கு முன்­னரும் ஐரோப்­பிய வியா­பா­ரிகள் இவர்­க­ளுடன் போராட்டம் நடத்தும் வரை­யிலும் இந்த நிலை நீடித்­தி­ருந்­தது.  

ஆரம்ப யுகத்தில் இதற்கு நிக­ரான இன்­னொரு சம்­ப­வமும் இடம்­பெற்­றது. அது சீனா­வி­லி­ருந்து இந்­தி­யாவும் ஐரோப்­பாவும் கடல்­மார்க்­க­மாக போக்­கு­வ­ரத்தை முன்­னெ­டுத்­த­போது பௌத்த மதம் மியன்­மாரில் சிறி­வி­ஜய இரா­ச­தா­னி­யி­லி­ருந்து ஆசி­யாவின் தென்­ப­குதி வரையில் வியா­பித்­தி­ருந்­தது.

போக்­கு­வ­ரத்து மார்க்­க­மா­கவும் வியா­பார அடிப்­ப­டை­யிலும் வியா­பா­ரிகள் பௌத்த, இஸ்­லா­மிய தர்­மங்­களை கொண்டு ஆசி­யாவில் உள்ள பகு­தி­களை ஊட­ருத்துச் சென்­றதால் ஆசிய மக்­க­ளி­டையே பொறுமை உள்­ளிட்ட பண்­புகள் மேம்­பட்­டன. 

தற்­போது உல­க­ம­ய­மாக்­கலை தொடர்ந்து மேற்­கத்­தைய நாடு­களில் முன்­னெ­டுக்­கப்­படும் பொரு­ளா­தார மாற்­றங்­களை நாமும் பின்­பற்­றா­விட்டால் எமது இலக்­கு­களை அடைய நீண்­ட­காலம் எடுக்கும்.

அதேபோல் பொரு­ளா­தார வளர்ச்­சியும் இளை­ஞர்­களின் பங்­க­ளிப்பும் புத்­து­ரு­வாக்­கமும் வலு­வான நிலையில் உள்­ளது. 

அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லி­ருந்து இந்து சமுத்­திரம் வரை­யி­லான பகு­தியில் வலு­வான பொரு­ளா­தார சந்தை வாய்ப்­புக்­களை தன்­வ­சப்­ப­டுத்திக் கொள்ள இந்­தி­யாவும் சீனாவும் கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­கின்­றன. அது எமக்கு போட்­டி­யாக அமைந்­தாலும்  மறு­புறம் வாய்ப்­பா­கவும் அமையும். 

விஞ்­ஞான தொழில்­நுட்ப அடிப்­ப­டை­யி­லான வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த பொரு­ளா­தார முறை­மை­க­ளி­னூ­டாக எமது நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை வலுப்­ப­டுத்த முடியும்.

சக்­தி­மிக்க தலை­மைத்­து­வமும் எதிர்­கால திட்­டமும் இதற்­கான உந்து சக்­தி­யாக அமையும். எதிர்­கால சந்­ததி­யி­ன­ருக்கு வலு­வான ஒரு வாழ்க்கை சூழல் தேவைப்­ப­டு­கி­றது. அதனை அமைத்துக் கொடுக்க வேண்­டிய பொறுப்பு எமக்கு உள்­ளது. இதனால் எமக்கு மற்­றுமோர் வாய்ப்பு உள்­ளது. 

இன்று ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து மத்­திய கிழக்­கி­னூ­டாக தென்­கி­ழக்­கா­சியா வரையில் பொரு­ளா­தார வலு­வாக்­கத்­திற்கு நெருக்­க­டி­யாக இருந்த கார­ணிகள் முடக்­கப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் ஆசி­யாவின் உற்­பத்­தி­க­ளுக்கு மேற்­கத்­தைய நாடு­களின் கேள்வி குறை­வ­டைந்­துள்­ளது. இருப்­பினும் நுகர்வோர் இலாபம் ஈட்டும் வரை­யி­லான முத­லீ­டுகள் வலு­வ­டைந்­துள்­ளன. 

உலக வங்­கியின் அறிக்­கையின் பிர­காரம் 1.7 பில்­லியன் உல­க­வா­சிகள் வலு­வான பொரு­ளா­தார மேம்­பாட்டை நோக்கி பய­ணிக்­கின்­றனர். அதில் தெற்­கா­சி­யாவில் உள்­ள­வர்கள் முன்­னிலை வகிக்­கின்­றனர்.

பொரு­ளா­தார திட்­டங்­க­ளி­னூ­டாக பெற்றுக் கொள்ளும் பாடங்கள் போன்று சமய அடிப்­ப­டை­யி­லான தெரி­வு­களும் முக்­கி­ய­மா­னது. 

குறிப்­பாக இஸ்­லா­மிய சமூ­கத்தின் பொரு­ளா­தார முறை­மைகள் தொடர்பில் உல­கத்­தவர் அறிய வேண்­டிய பல முறை­மைகள் உள்­ளன. 1970 களில் பொரு­ளா­தார விடு­த­லைக்­கான முன்­னோ­டி­யாக இஸ்லாமிய பொருளாதாரமே இருந்­தது. 

இன்று இலங்­கையில் பிர­தான இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்கி ஜன­நா­யக அடிப்­ப­டை­யி­லான ஒன்­றி­ணைந்த அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முன்­னோ­டி­யாக மாறி­யுள்­ளது.

 இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கும் சிறந்த அடித்­த­ள­மாக அமையும். 

இந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார மத்­தி­யஸ்­த­ல­மா­வதே எமது பிரதான இலக்காகும். அதனை அடைவதற்காக அனைத்து கட்டமைப்புக்களையும் உருவாக்கி வருகின்றோம். அதற்கமைய சீரமைக்கப்பட்ட பொருளாதார ரீதியில் மேம்பட்ட சமூகமொன்றையும் கட்டியெழுப்புவோம். 

அதற்­காக ஆசிய பிராந்­தி­யத்­தி­லுள்ள நாடுகள் வர­லாற்று ரீதி­யான பொரு­ளா­தார ஒப்­பந்­தங்கள், உல­க­ம­ய­மா­தலில் பல்­வே­று­பட்ட அழுத்­தங்கள், வேற்­று­மத மேற்­கத்­தைய நாடு­களின் பொரு­ளா­தார முறை­மை­களை பின்­பற்றல், எமக்­கான தனித்­து­வ­மான சமய தர்­மங்­களை பின்­பற்றல் ஆகி­ய­வை­மூலமே எமக்கு முன்னால் இருக்கும் சவால்­களை எதிர்­கொள்ள முடியும்.

அதேபோல் எதிர்­கா­லத்தில் சர்­வ­தேச பொரு­ளா­தார தடை­களை நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  என்றார். 

No comments

Powered by Blogger.