Header Ads



ஹஜ்ஜின் போது, ஷைத்­தா­னுக்கு கல்­லெ­றியும் நேரம் குறைப்பு


(எம்.ஐ.அப்துல் நஸார்)

கடந்த வருட ஹஜ் யாத்­தி­ரையில் கல்­லெ­றியும் கட­மையின் போது நெரி­சலில் சிக்கி சுமார் 2,300 பேர் உயி­ரி­ழந்­ததைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள ஹஜ் கட­மை­யின்­போது இறுக்­க­மான கட்­டுப்­பா­டுகள் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது.

இதற்­க­மைய ஹஜ்ஜின் போது நிறை­வேற்­றப்­படும் ஜம்றத் அனுஷ்­டா­னத்தின் நேரம் 12 மணி நேரத்தால் குறைக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வழமை போன்று மக்­கா­வி­லுள்ள பெரிய பள்­ளி­வா­ச­லுக்குத் கிழக்கே சுமார் ஐந்து கிலோ­மீற்றர் (மூன்று மைல்) களுக்கு அப்பால் அமைந்­துள்ள மினாவில் செப்­டம்பர் 11ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்­க­ளுக்கு ஷைத்­தா­னுக்கு கல்­லெ­றியும் அனுஷ்­டானம் இடம்­பெறும்.

ஆனால் இவ்­வ­ருடம் கல்­லெ­றியும் முத­லா­வது நாளில் காலை 06.00 மணி தொடக்கம் 10.30 மணி வரையும், இரண்­டா­வது நாளில் பிற்­பகல் 2.00 மணி தொடக்கம் 6.00 மணி­வ­ரையும், மூன்­றா­வது நாளில் முற்­பகல் 10.30 மணி தொடக்கம் பிற்­பகல் 2.00 மணி­வ­ரையும் கல்­லெ­றி­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என ஹஜ் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த நடை­மு­றையின் கார­ண­மாக யாத்­தி­ரி­கர்கள் இல­கு­வாக கல்­லெ­றிய முடியும் என்றும் அதி­க­மானோர் ஒரே நேரத்தில் ஒன்­று­கூ­டு­வதால் ஏற்­படும் நெரி­சலைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சின் கீழ்­நிலைச் செய­லாளர் ஹுஸைன் அல்-­ஷரீப் தெரி­வித்­துள்ளார்.

எனினும் இந்தப் புதிய நேர வரை­யறை யாத்­தி­ரி­கர்கள் நெரி­சலை எவ்­வாறு குறைக்கும் என அவர் விளக்­க­வில்லை.

ஹஜ் வர­லாற்றில் கடந்த வருடம் நடை­பெற்ற சன நெரி­சலே மிக மோச­மா­ன­தாகும். இந்த சன­நெ­ரிசல் ஒரு பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான செலவில் அமைக்­கப்­பட்ட பிர­மாண்­ட­மான ஐந்து தட்­டுக்­களைக் கொண்ட ஜம்ரத் பாலத்­திற்கு வெளிப்­பு­றத்­தி­லேயே நடை­பெற்­றது.

இந்தப் பாலம் கிட்­டத்­தட்ட ஒரு கிலோ­மீற்றர் (அரை மைலுக்கும் அதி­க­மான) நீள­மு­டை­யது. இதன் மூலம் ஒரு மணித்­தி­யா­லத்தில் மூன்று இலட்சம் யாத்­தி­ரி­கர்கள் கல்­லெ­றியும் கட­மை­யினை நிறை­வேற்ற முடியும். 

நெரி­ச­லுக்கு காரணம் பொலி­ஸா­ரினால் வீதி முடப்­பட்­டி­ருந்­தமை, வாட்டும் வெயிலில் இலட்சக் கணக்­கான யாத்­தி­ரி­கர்­களை உரிய முறையில் கையா­ளத்­த­வ­றிய முகா­மைத்­துவம் ஆகி­யவை என யாத்­தி­கர்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

சம்­பவம் நடை­பெற்­றதும் உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரும், ஹஜ் குழுவின் தலை­வ­ரு­மான முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் நாயிப் உட­னடி விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்டார். ஆனால் அதன் விசா­ர­ணையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட எந்த விப­ரங்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எவ்­வா­றெ­னினும், கல்­லெ­றியும் நேர அட்­ட­வணை உள்­ளிட்ட பல்­வேறு பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரிகள் அறி­வித்­துள்­ளனர்.

வெளி­நாட்டு அதி­கா­ரி­களின் தக­வ­லுக்கு அமை­வாக செப்­டம்பர் 24ஆம் திகதி நடை­பெற்ற நெரி­சலில் சிக்­குண்டு உயி­ரி­ழந்த யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை குறைந்­தது 2,297 என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உயி­ரி­ழந்த சிலரின் உடல்­களை அடை­யாளம் காண முடி­யா­துள்­ள­தாக அதி­கா­ரிகள் கவலை வெளி­யிட்­டுள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 796 என சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது.

சன நெரி­சலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான மற்­று­மொரு நட­வ­டிக்­கை­யாக ஹஜ்ஜின் ஆரம்­பத்­தின்­போது புனித பெரிய பள்­ளி­வா­சலில் வழக்கமான நாளாந்த தொழுகைகளுக்கு ஒரு மணிநேரம் முன்னரும், ஒரு மணிநேரம் பின்னரும் கஃபாவை தவாப் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் சவூதி ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இவ்வருட ஹஜ் செப்டம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகிறது. ஆனால் இலட்சக் கணக்கான யாத்திரிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து ஏற்கனவே வந்து சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.