மஹிந்தவின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தில் - சுதந்திரக் கட்சி அலுவலகம் முற்றுகை
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரை தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இன்று கொழும்பை நோக்கி படையெடுத்த இவர்கள் காலி வீதியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை அடைந்தார்கள்.
கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு கொழுத்தி, பெரும் ஆரவாரமிட்டு கோஷங்களை எழுப்பிக்கொண்டு கட்சியினுள்ளே செல்வதற்கு முயற்சித்தார்கள்.
எனினும் கூட்டு எதிர்க்கட்சியினரை உள் நுழைய விடாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் மூடப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக பல கோஷங்களை எழுப்பியதோடு, பட்டாசு கெழுத்தி பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
மேலும், கட்சி அலுவலகத்திற்குள் இவர்களை அனுமதிக்காமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கலைந்து போயுள்ளதாகவும், பாதி அளவானோர் இன்னும் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்புவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Post a Comment