Header Ads



ரணில் இந்த அரசாங்கத்தில் இருப்பது, தனக்கு கிடைத்த ஜனாதிபதி பதவியை அர்ப்பணித்துவிட்டே..!

20 வருடங்கள் நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 20 வருடங்களுக்கு ஆளும் கட்சியாக செயற்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த காலப் பகுதியில் நாட்டின் அபிவிருத்தியை அதிகரிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முடிந்த அனைத்து வழிகளிலும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று -11- சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க இந்த அரசாங்கத்தில் இருப்பது தனக்கு கிடைத்த ஜனாதிபதி பதவியை அர்ப்பணித்துவிட்டே என கூறிய சுஜீவ சேனசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியே எனவும் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

2 comments:

Powered by Blogger.