Header Ads



சைவ ஆலயம் அருகே புத்தர்சிலை உடைப்பு - தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது


வன்னியின் கனகராயன் குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு வீதியின் பாரம்பரிய பெயரொன்று இராணுவ அதிகாரி ஒருவரின் சிங்களப் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் குறித்த அமைப்பு அண்மையில் தாக்கியிருந்தது. 

சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு தமிழ் இனத்தின் மீதும் தமிழர் பிரதேசத்திலும்  திணிக்கப்படும் மதரீதியான அத்துமீறல்களையும் சிங்கள ஆதிக்கத்தையும் இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது என்றும் தமிழ் இனப் பற்றாளர்கள் என்ற அமைப்பு கூறியுள்ளது.

1 comment:

  1. இதுவெல்லாம் ராஜபக்ஸவும், அவனுடைய அடிமைகளும்
    (ஹிந்துவாத அமைப்புக்கள்) நாட்டின் இஸ்திரி தன்மையை குலைக்க செய்த செயலாக கூட இருக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.