Header Ads



ஷகீப் படுகொலையில் 7 பேர் இன்று கைது - பணியாளரே கடத்தியதாக ஆதாரங்கள் கிடைப்பு


பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி கொல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை மாவனெல்ல - ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை வண்டி மூலம் கொண்டு சென்ற நாட்டாமை (பொதி சுமப்பவர்கள்) உள்ளிட்ட 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகரின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரது பணியாளர் ஒருவரே, இவரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.