Header Ads



போயிங் 777 விமானம் ஓட்டிய, பாகிஸ்தான் சகோதரிகள்


பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான்  இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் பைலட்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில்  மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார். தங்கை ஏர்ரம் மசூத்தும் தற்போது போயிங் -777 ஓட்டுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் முதன்முறையாக ஒரே நேரத்தில்  போயிங் -777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

சகோதரிகள்  இருவர் ஒரே எடைபிரிவில்  போயிங் -777 விமானம் ஒட்டியதாக முன்பு எங்கும் ஆதாரங்கள் இல்லை என்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான்  இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தான்யல்  கிலானி தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'டான்' இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார

2 comments:

  1. முஸ்லிம் சகோதரிகள் ஓட்டினார்கள் என்று "மாஷா அல்லாஹ்" சொல்லப் போகின்றோமா?

    இல்லை, இஸ்லாமிய ஆடை இல்லை, ஹிஜாப் இல்லை, விமானத்தில் மஹ்ரம் இல்லை என்று சொல்லி குறை சொல்லப் போகின்றோமா?

    இதில் இரண்டில் ஒன்றை செய்வதுதானே வழமை.

    ReplyDelete
  2. உங்களுக்கு எது முக்கியம் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான கூலி நிச்சயம் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.