Header Ads



4 ஆம் திகதி, மஹிந்த இருக்கமாட்டார்..?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியன்று, குருநாகலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினரால் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரும் அவ்வழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு, மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன், எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர், இத்தாலி செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அங்கு செல்லும் அவர்கள், எதிர்வரும் 4ஆம் திகதியன்று, இத்தாலியிலுள்ள, சிங்கள டயஸ்டபோராவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.