Header Ads



சுதந்­திரக் கட்­சிக்கு 4 முஸ்லிம்கள், அமைப்பாளர்களாக நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு 40 புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

இந்­நி­லையில் 4 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்­ப­ாளர்­க­ளாக நியமனம் பெற்றுள்ளனர். 

வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.கே. மஸ்தான் வவு­னியா தொகுதி அமைப்­பா­ள­ரா­கவும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் எம்.எச்.எம்.அம்ஜாட் பேரு­வளை தொகுதி அமைப்­பா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் கொழும்பு மாவட்ட அமைப்­பா­ள­ராக முன்னாள் மாந­கர சபை உறுப்­பினர் ஹுஸைன் மன்சில் மற்றும் கேகாலை மாவட்ட அமைப்­பா­ள­ராக பரூஸ் அப்துல் லதீபும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

No comments

Powered by Blogger.