இலங்கையை சேர்ந்த 45 பேர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைவு - நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
-விடிவெள்ளி-
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் ஆசிய நாடுகளில் இருந்தும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துகொள்ளும் நபர்கள் இலங்கையை அடித்தளமாக பயன்படுத்துவது குறித்து வெளிவரும் செய்திகளை சாதாரணமாக கருத முடியாது எனவும் இது தொடர்பில் உள்நாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
புலனாய்வு பிரிவை மேலும் பலப்படுத்தும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் பரவிவரும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பில் இணைய முயற்சிக்கும் தெற்காசியர்கள் தமது பயணப்பாதையாக இலங்கையில் யாழ்ப்பாணத்தை பயன்படுத்தி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பிடம் வினவியபோதே அவர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொள்ளும் வகையில் ஆசிய நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் பயணிக்கின்றமை தொடர்ச்சியாக ஆசிய நாடுகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகள் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பில் தகவல்களை தந்த வண்ணமே உள்ளன. இப்போதும் யாழ்ப்பாண மார்க்கத்தை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையை பொறுத்தவரையில் அச்சுறுத்தலான வகையில் அல்லது இவ்வாறான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இலங்கை மக்கள் செயற்படவில்லை என்று உறுதியாக தெரிவிக்க முடியும்.
எமது புலனாய்வு பிரிவினர் இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அலட்சியமாக செயற்பட முடியாது. மேலும் கடந்த காலத்திலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கூட்டணியில் இலங்கையை சேர்ந்த நபர்கள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இப்போதும் புலனாய்வு பிரிவின் தகவல்களில் அவ்வாறுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தேசிய பாதுகாப்பை பலப்படுத்த சகல அதிகாரங்களையும் ஜனாதிபதி எமக்கு கொடுத்துள்ளார்.
தேவையான சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் வினவியபோது,
இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச நாடுகளின் புலனாய்வு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. பயங்கரவாத சூழலில் இருந்து விடுபட்ட எமது நாட்டில் மீண்டும் எந்த வகையிலேனும் அச்சுறுத்தல் ஏற்படுவதை மக்கள் எவரும் விரும்பப்போவதில்லை. அதேபோல் எமது பாதுகாப்பு தரப்பினருக்கு பயங்கரவாத சூழல் தொடர்பில் அனுபவம் உள்ளது. ஆகவே நிலைமைகளை சரியாக கையாள முடியும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 45 பேர் இரகசியமாக சிரியாவை சென்றடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றன.
அதில் இருந்து தொடர்ச்சியாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஊடுருவல் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் எமது பாதுகாப்பு எப்போதும் பலமாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தகவல் தருகையில் ,
மேற்கத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்து வருவதைப்போல தற்போது ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருகின்றது. இப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் அடையாளம் காணப்படவில்லை.
எமது புலனாய்வுப் பிரிவினர் மிகவும் துல்லியமாக இந்த விடயங்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றனர். அது தவிர்ந்து எமது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாகவே உள்ளன என்றார்.
உலக நாடுகளில் எங்கள்ல்லாம் இஸ்ரேவேளர்களின் சங்கமம் உள்ளதோ அங்கல்லாம் எதாதாவது ஒரு பயங்கர வாதாம் உருவாகும் அல்லது அவர்கள் உருவாக்கி விடுவார்கள் அல்லது உருவாக வழி வைப்பார்கள் இதுதான் உலக உண்மை இதை இலங்கை அரசாங்கம் நன்றாக புரிந்து உடனடியாக இஸ்ரவேல் தூதுவர் ஆலயத்தை வெளியேற்ற வேண்டும்.நாட்டில் வந்திருக்கும் சகல இஸ்ரவேலர்களையும் நாட்டை விட்டும் வெளியேற்ற வேண்டும் அப்போதுதான் இந்த இலங்கை மக்கள் எதிர் காலத்தில் நிம்மதியாக வால முடியும் என்பதை பாதுகாப்பு திணைக்களமும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteI think RAW is in SL to monitor activities of ISIS in SL.
ReplyDeleteHope USA will also assist SL.
As ling as MOSAD and Israel is in Sri lanka, we will be succeptible.
ReplyDeleteமுஸ்லிம்களாகிய நாமும் இலங்கையில் இல்லை இல்லை என்ற சொல்லையே தொடர்ந்து பேசி வருவதும் நல்லதல்ல காரணம் இப்போது அதிகமான இளம் வயது வாலிபர்கள் சிநிமாத்துரைகளிலும்,மதுபான பாவனைகளிலும்,இன்னும் பல மோசமான துறைகளில் சிந்தனைகளை விட்டு மூளைச்சலவை சையப்பப்படுகிரார்கள் ஆகவே முஸ்லிம் சமுக தலைவர்கள் ஊர் நிருவாகிகள் உலமாக்கள் புத்தி ஜீவிகள் இதில் மிகவும் கவனம் சலுத்த வேண்டும்.நமக்கு என்ன என்ற போக்கில் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.நபி ஸல் அவர்கள் சொன்ன முக்கியமான ஒரு ஹதீஸை நாம் எல்லோரும் மீட்டிப்பார்க்க வேண்டும்.கப்பலில் பிரயாணம் செய்த மேல் தட்டாரிடம் தண்ணீர் கேட்டு சிரமம் பண்ணாமல் கப்பலுக்கடியில் ஓட்டை போட்டு தண்ணீர் எடுக்கும் கீழ் தட்டார்களின் முயற்சியை மேல் தட்டார் கண்டு கொள்ளவில்லை என்றால் இரண்டு தட்டாரும் மூழ்கிப் போகும் அபாயம் பற்றிய ஹதீஸை நாம் எல்லோரும் மீட்டிப்பார்க்க வேண்டும்.
ReplyDeleteISIS IS BASICALLY NOT AN ISLAMIC ARMED GROUP.RACISTS WHO TRY TO CREATE PROBLEMS WITH THE FUNDING AGENCIES BACKED BY NORWAY MUST BE ENLIGHTENED ENOUGH. THEN ONLY WE CAN MAKE THE NATIONAL INTEGRATION IN OUR COUNTRY.SHIA SECT IN SRILANKA PLAY BEHIND THE SCREEN BACKED BY IRAN AND ISRAEL.
ReplyDeleteMr.Ajan Raw not working for them self JUST working for CIA in Asian region.
ReplyDelete