Header Ads



மஹிந்தவிற்கு 4 வது முறையும் தோல்வி - கபீர் ஹாசீம்

மஹிந்த நான்காவது முறையும் தோல்வியை சந்தித்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவதாக் கூறிக்கொண்டு தோல்வியைச் சந்தித்ததுடன், பொதுத் தேர்தலிலும் தனது வெற்றி உறுதி என்று சவால் விடுத்தார்.

ஆனால் அதிலும் பாரிய தோல்வியைச் சந்தித்ததாக அமைச்சர் கபீர் ஹாசீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மேதினத்திலும் தமது பலத்தை நிறுப்பிப்பதாக கூறினார்கள் .அதிலும் தோல்வியைச் சந்தித்தவர்கள் மீண்டும் பாதயாத்திரை மூலம் அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றும்,அதுவும் தோல்வியிலேயே முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நிலைமையை மக்களுக்கு இன்று நன்றாக புரிந்துக்கொள்ள முடியும்.

இன்று இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாலே அவர்களது பாதயாத்திரைக்கும் பாதுகாப்பு வழங்கினோம் என தெரிவித்துள்ள அமைச்சர் இது தான் நல்லாட்சியின் கொள்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.