Header Ads



துருக்கியில் திருமண வீட்டில் தற்கொலைத் தாக்குதல் - 30 பேர் மரணம், 90 பேர் காயம்


துருக்கியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கியன் காசியான்டெப் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

திறந்த வெளியில் நடைபெற்ற திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் ஓர் தற்கொலைத் தாக்குதல் எனவும் இதனை தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாகவும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாககுதல் இடம்பெற்ற காசியான்டெப் பகுதி குர்திஸ்கள் அதிகளவில் வாழும் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை.

எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தரப்புக்கள் மேற்கொண்டிருக்கலாம் என அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.