Header Ads



3 தொன் நிறையுடைய மீன்கள் 8 வருடங்களாக குளிரூட்டியில்..!

மூன்று தொன் நிறையுடைய மீன் தொகையொன்று, கடந்த 8 வருடங்களாக, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், நட்டத்தில் இயங்கிவரும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் கடன் மற்றும் சம்பள நிலுவைகளைச் செலுத்துவதற்காக திறைசேறியிலிருந்து 6,500 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.