உடலுக்கு தீ வைத்துக்கொண்ட 2 சிறுமிகள் உயிரிழப்பு
பதுளை - மடுல்சீமை - ரோபேரிவத்தை பகுதியில் உடலுக்கு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படும் இரு உறவுக்கார சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 17 வயதான இரு சிறுமிகளே பலியாகியுள்ளனர்.
இவர்களில் ஒருவர் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார். இந்த விடயம் அவரது தந்தைக்கு தெரியவர, அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதுவே, இவர்கள் தீக்குளிக்கக் காரணம் என தெரியவந்துள்ளதோடு, இதன்போது கடுமையான தீக்காயங்களுக்குள்ளான சிறுமி நேற்றே உயிரிழந்துள்ளார்.
மற்றையவர் இன்று காலை மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இவர்களது சடலங்களின் பாகங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் மடுல்சீமை பொலிஸார் சம்பவம் குறித்து விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment