Header Ads



21 ஆம் ஆண்டில் உணர்வு

பாபர் மஸ்ஜித் இடிப்பு, மும்பை கலவரம், நாகூர் கலவரம் போன்ற காலக்கட்டங்களில் முஸ்லிம் சமுதாய செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல எந்த ஊடகமும் இல்லாத காலக்கட்டத்தில் வலியோடு இருந்த வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் உணர்வு வார இதழ் சமுதாய செய்திகளை ஏந்தியவாறு வெளிவந்தது.

அன்று முதல் இன்று வரை சமுதாய செய்திகளை துல்லியமாகவும், உள்நாட்டு செய்தி முதல் அரபுலக செய்தி வரை தெளிவான செய்திகளையும் வெளியிட்டு சமுதாய வாசகர்கள் மத்தியில் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது உணர்வு.

கோவை கலவரம், குஜராத் இனப்படுகொலை, பாலஸ்தீன் மீதான இஸ்ரேலிய தாக்குதல், ஆப்கானிஸ்தான், இராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தமிழ் கூறும் சமூகத்திற்கு உள்ளதை உள்ளபடியே அறிய தந்தது உணர்வு.

தமிழக முஸ்லிம் சமூகத்தின் நெஞ்சங்களில் நீங்க இடம் பிடித்த உணர்வு 21 ஆம் ஆண்டில் நுழைவது மட்டற்ற மகிழ்ச்சி...


2 comments:

  1. இஸ்லாமிய வழியில் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.