Header Ads



ஜனாதிபதி மைத்திரியின், உருவபொம்மை எரிப்பு - 200 பேர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்து மாபெரும் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இலங்கை அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து குறித்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 107 தமிழர்கள் உயிரிழப்புக்கு நீதி விசாரணை கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை ராமகிருஷ்ணன் உட்பட போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 comment:

  1. This protest was held on the instructions of our JO members specially W. Wansa...etc..hahaha

    ReplyDelete

Powered by Blogger.