இலங்கையில் முஸ்லிம்களின் திருமண வயதெல்லை 12 லிருந்து 18 ஆக உயருகிறது
-விடிவெள்ளி ARA.Fareel-
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கு கடந்த கால அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு தனது சிபாரிசுகளை விரைவில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளது.
பலதார மணம், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை, விவாகரத்தின் போது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்தாஹ் (நஷ்டஈடு) தாபரிப்புப் பணம் போன்ற விடயங்கள் உட்பட பல திருத்தங்களை குறிப்பிட்ட குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12 லிருந்து 18 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
பலதார மணத்திலும் சில கட்டுப்பாடுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விவாகரத்தின்போது கணவர் மனைவிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தாபரிப்பு தொடர்பாக நிதியமொன்றினை நிறுவுவதற்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியம் நீதியமைச்சின் கீழ் அமைய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு குழுவும் நியமிக்கப்படும்.
அக் குழுவின் உறுப்பினர்களாக நீதியமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட ஐவர் உள்ளடங்கியிருப்பர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளைச் செய்வதற்கு கடந்த கால அரசாங்கத்தினால் தற்போது ஓய்வுபெற்றிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என்போர் அங்கம் பெற்றுள்ளனர். இக்குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி காதி நீதிபதிகளாக பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்றாலும் உலமா சபை இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
குழுவின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதும் நீதியமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றதன் பின்பே சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
May Allah Protect the Muslim members of this group from violating the SHAREEA knowingly or without knowledge.
ReplyDeleteNo one has the right to change the Permission of Allah in any issue. Especially any Muslim who tries to put his opinion over the decision of Allah.. May Allah put him down and Protect the true Muslims from this evils, who tries to compromise the DEEN for the sake of KUFFARS will.
If the reformations are according to the teachings of the Holy Qur'an and the Tradions of the Prophet it is most welcome othervise they will earn the wrath of Allah which will lead them to His punishment. May Allah guide all of us in the straight path. Ameen.
ReplyDeleteWelcome...do changes as quick as possible to protect the Muslim women from the misuse of men.
ReplyDeleteஎழு வானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ் அறிவித்து / வழிகாட்டிக் கொடுக்கமளுக்கு நபி சள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் எதையும் செய்ததாகவோ, சட்டமாக்கியதாகவோ, மற்ற மனிதர்களுக்கு ஏவியதாகவோ இந்த மார்க்கத்திலை எங்கேயும் இல்லை. யார் நபியிட சுன்னவுடனும், ஷரியா சட்டங்களுடனும் தங்களின் புத்தியை பாவித்து மாற்றம் செய்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக தங்களுக்கு புத்தி வந்துவிட்டது என்று சொல்ல வருகின்றார்களா?
ReplyDeleteஇருந்த சட்டமும் பிழை, வந்துகொண்டு இருக்கிற சட்டமும் பிழை. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் சஹீகாண புகாரி அறிவுப்பு ஆறு வயசு என்றால், அதை மாற்றி சட்டம் போட யாருக்கும் உரிமை இல்லை. எது எதுக்கோ எல்லாம் போராடுகின்ற முஸ்லிம் சமூகம், அல்லாஹ்வின் வழிகாட்டலில் (ஜிப்ரில் அலைச்சலாம் தட்டில் கொண்டுவந்து காட்டிய_) அந்த திருமணத்தின் வயதை மாற்றுகின்றார்களோ, அதுக்கு எதிராக குரல் கொடுத்து, அல்லாஹ்வின் சட்டம் அல்லாத சட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல தயார் இல்லாதது கடும் கவலையானது.
தலாக் சொன்னால், இஸ்லாமிய சட்டத்தில் ஜீவனாம்சம் இல்லை, ரிஸ்க் கொடுப்பவன் ரப்பு, ஆக தலாக் சொல்லிவிட்ட கணவனிடம் பணம் கேட்கவோ, குடுக்கும் படி சொல்லவோ முடியாது.
அல்லாஹ் அவனது கோவப் பார்வை எம்மக்கள் மீது இறங்காமல் பாதுகாக்க வேண்டும், இனியும் தாமதம் செய்யாமல் சத்தியத்தை சரியாக சொல்லி, அதை பாதுகாருங்கள்.
காலம் காலமாக அனுபவிக்கும் குர்ஆனிய அடிப்படையான முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை முஸ்லிம்களின் அதி பெறுமதிவாய்ந்த சொத்தாகும்.
ReplyDelete