Header Ads



குற்றவாளிகளுக்கும், பிரபலமானவர்களுக்கும் இடமில்லை - SLFP

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் தகுதியான திறமையானவர்களுக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபலமானவர்கள் தேர்தல்களின் போது வாக்குகளை கொள்ளையிட்டுச் சென்று விடுவதாக தெரிவித்த அவர் , இந்தமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் தெரிவு மிகவும் கிரமமான முறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு நெருக்கமான மக்களுக்காக சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சுமார் 10,000 பேர் வேட்பு மனு கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.