Header Ads



IS தீவிரவாதம், இலங்கையில் எச்சரிக்கை வேண்டும் - பாதுகாப்பு அமைச்சு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி கிழமையன்று பங்களாதேஸில் உணவகம் ஒன்று தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தென்னாசிய நாடானா பங்களாதேஸ் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவை எனவும், இதன் கரணமாக இலங்கை மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.