Header Ads



சிறையிலிருந்த பஸிலுக்கு, திடீரென முதுகுவலி - வைத்தியசாலையில் அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட முதுகுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பஸில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ம் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. ஹிக் ஹிக் முதுகுவலியா ...... இந்த மாதிரி வலி தானே எப்போதும் இவர்களுக்கு வருகின்றது... சிறைச்சாலையேய் கொண்டுபோய் வைத்தியசாலையில் வைத்தால் நன்றாய் இருக்கும். உண்மையில் இவர்களை பிடித்து சிறையில் அடைப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

    ReplyDelete
  2. These are gimmicks created by the politician in order to avoid the life in jail.

    ReplyDelete
  3. Dear Basil...u were sleeping too much in bed. That's what muthuhuwali. You were not doing any work....

    ReplyDelete

Powered by Blogger.