சஜின் வாஸின் பாதுகாப்பை நீக்க, ஜனாதிபதி உத்தரவு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பாதுகாப்பை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரபாலசிறிசேன உத்தரவிட்டுள்ளார். சஜின் வாஸ் குணவர்தனவிற்கு முக்கிய பிரபுகளுக்காக வழங்கப்படும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பினை நீக்குமாறு ஜனாதிபதி காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார். சஜின் வாஸ் குணவர்தனவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். முன்னாள் காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பதவியில் இருந்த போது இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment