Header Ads



நிழல் அமைச்சரவை ஆவியாக மாறிவிடும், மஹிந்தவுக்கு வெட்கக்கேடு - சஜித்

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு நிழல் அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

நிழல் அமைச்சரவையை நியமித்தவரே அமைச்சரவையில் இருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகியுள்ளமை வெட்கக்கேடு. 24 மணித்தியாலங்களேனும் கடக்கவில்லை. தனக்கு ஏதும் தெரியாது என நிழல் அமைச்சரவையின் தலைவரின் சகோதரர் கூறுகின்றார். நிழல் அமைச்சரவை 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு மாயையாக மாறியுள்ளது. நாளை அது ஆவியாக மாறிவிடும். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற சூனியக்காரர்கள் மக்களைக் குழப்புவதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சி நாளை மறுநாள் மக்கள் கருத்துக்களின் ஊடாகவே தோற்கடிக்கப்படும்.

No comments

Powered by Blogger.