Header Ads



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மூவர் படுகொலை

 மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணொருவர், அவரது மகள், தந்தைய ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதோடு, கொல்லப்பட்ட பெண்ணின் கணவரே இவர்களை கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் மகளது சடலங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.

மேலும், பெண்ணின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இறந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.