தம்புள்ளை பள்ளிவாசல் ரணிலின் கவனத்திற்கு - முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம் குறித்து கவலை
பல வருடங்களாக சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் தம்புள்ளை பள்ளிவா சலை புதிய இடமொன்றில் நிர்மாணிப்பதற்கு அரசு இணங்கியிருந்தாலும் இதனை வேண்டுமென்றே நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் தாமதப்படுத்தி வருவதாகவும் இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
தம்புள்ளையில் இன முரண்பாடுகள் ஏற்படாது தடுத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு தம்புள்ளை பள்ளிவாசலை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு காணியொன்று வழங்குவதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்ட பின்பும் நகர அபிவிருத்தி அதிகார சபை இது விடயத்தில அக்கறையின்றி இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்;
‘தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்டன. அப்பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமியில் தற்காலிக கூடாரமாக அமைந்திருப்பதாக பௌத்த குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அங்கிருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்கிறார்கள். இதனால் தம்புள்ளையில் இரு சமூகங்களுக்கு இடையில் விரிசல் நிலை தோன்றியுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபையும் பள்ளி வாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கான காணியொன்று தம்புள்ளை நகரில் இனங்காணப்பட்டுள்ளதென்றாலும் அதனை முஸ்லிம்களுக்கு வழங்குவதில் நகர அபிவிருத்தி அதிகார சபைத்தலைவர் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இது இப்பகுதியில் மீண்டும் இன முரண்பாடுகள் வளர்வதற்கு காரணமாகவுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் முறைப்பாடு செய்திருக்கிறேன். தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு தாமதமில்லாது தீர்வு வழங்குமாறு பிரதமரைக் கோரியுள்ளேன் என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோவை அவரது கையடக்கத் தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தும் அதில் பலன் கிடைக்கவில்லை.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீனை தொடர்பு கொண்டு பள்ளிவாசல் அகற்றப்படுவது தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
‘நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை இ.போ.ச டிப்போவுக்கு அருகில் காணியொன்றினை இனங் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இக்காணி தம்புள்ளை பள்ளிவாசல் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து ½ கிலோ மீற்றர் தூரத்திலே உள்ளது.
ஆனால் பள்ளிவாசலுக்கு வழங்குவதற்கு இனங்காணப்பட்டுள்ள காணி இதுவரை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு காண்பிக்கப்படவில்லை. அவ்வாறு எமக்கு காண்பிக்கப்பட்டாலே அக்காணி பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு உகந்த இடமா என்பதனைத் தீர்மானிக்க முடியும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை இது விடயத்தில் தனது கடமைகளைத் துரிதப்படுத்துவதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காமல் மௌனம் சாதிப்பது கவலைக்குரியது.
முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு வசதியான காணியினைப் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
தம்புள்ளையில் இன முரண்பாடுகள் ஏற்படாது தடுத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு தம்புள்ளை பள்ளிவாசலை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு காணியொன்று வழங்குவதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்ட பின்பும் நகர அபிவிருத்தி அதிகார சபை இது விடயத்தில அக்கறையின்றி இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்;
‘தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்டன. அப்பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமியில் தற்காலிக கூடாரமாக அமைந்திருப்பதாக பௌத்த குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அங்கிருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்கிறார்கள். இதனால் தம்புள்ளையில் இரு சமூகங்களுக்கு இடையில் விரிசல் நிலை தோன்றியுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபையும் பள்ளி வாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கான காணியொன்று தம்புள்ளை நகரில் இனங்காணப்பட்டுள்ளதென்றாலும் அதனை முஸ்லிம்களுக்கு வழங்குவதில் நகர அபிவிருத்தி அதிகார சபைத்தலைவர் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இது இப்பகுதியில் மீண்டும் இன முரண்பாடுகள் வளர்வதற்கு காரணமாகவுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் முறைப்பாடு செய்திருக்கிறேன். தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு தாமதமில்லாது தீர்வு வழங்குமாறு பிரதமரைக் கோரியுள்ளேன் என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோவை அவரது கையடக்கத் தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தும் அதில் பலன் கிடைக்கவில்லை.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீனை தொடர்பு கொண்டு பள்ளிவாசல் அகற்றப்படுவது தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
‘நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை இ.போ.ச டிப்போவுக்கு அருகில் காணியொன்றினை இனங் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இக்காணி தம்புள்ளை பள்ளிவாசல் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து ½ கிலோ மீற்றர் தூரத்திலே உள்ளது.
ஆனால் பள்ளிவாசலுக்கு வழங்குவதற்கு இனங்காணப்பட்டுள்ள காணி இதுவரை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு காண்பிக்கப்படவில்லை. அவ்வாறு எமக்கு காண்பிக்கப்பட்டாலே அக்காணி பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு உகந்த இடமா என்பதனைத் தீர்மானிக்க முடியும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை இது விடயத்தில் தனது கடமைகளைத் துரிதப்படுத்துவதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காமல் மௌனம் சாதிப்பது கவலைக்குரியது.
முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு வசதியான காணியினைப் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment