Header Ads



இஸ்லாமிய அழைப்பை முடக்க, காவிகள் முயற்சி


உலகறிந்த இஸ்லாமிய அழைப்பாளராகிய டாக்டர் ஜாகிர்நாயக்கின் அதாரபூர்வமானதும், தர்க்கரீதியானதுமான இஸ்லாமிய அழைப்பிற்கு முகம்கொடுக்க முடியாமல், தங்களது பிரச்சார இயந்திரங்களான காவி ஊடகங்களை முடுக்கிவிட்டு, அவரது இஸ்லாமிய அழைப்பை முடக்கிவிட காவிகள் முனைகிறது, மோடி அரசு.

20 கோடி பார்வையாளர்களை கொண்ட Peace Tv யையும், 2 கோடி பேர் பின்பற்றும் அவரது முகநூல் தளத்தையும் முடக்கிவிட மனப்பால் குடிக்கின்றனர்.

ஆனால் இத்தகையவர்களின் செயல்களை ஏக நாயனான அல்லாஹ் எவ்வாறு முறியடிக்கின்றான் என்பதை கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள் சாட்சி பகர்கின்றன.

..............................................
9:32 يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِــُٔــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ 
9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
0 وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ 
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். 

.............................................

டாக்டர் ஸாகிர் நாயக் கடந்த 25 வருடங்களாக இஸ்லாமிய அழைப்புப்பணியில் சமாதானத்தையும், ஒற்றுமையையும், பயங்கரவாதத்திற்கெதிராகவும் அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மனித குலத்திற்கு தனது நேர்மையான பிரச்சாரத்தின்மூலம், குறிப்பாக இனமோதல்கள் இடம்பெறும் இந்திய மண்ணில் துணிச்சலோடு சேவையாற்றி வருகின்றார்.

இவரது சேவையை மதித்து இஸ்லாமிய உலகில் உயரிய விருதான சமாதான விருது சவூதி அரேபியாவில் 2015ல் வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட மனிதர் தனது பேச்சுகள்மூலம் வன்முறையை தூண்டுகின்றாரென இந்துத்துவா காவி மீடியாக்கள் அவரை ஓரம்கட்ட எத்தனிக்கின்றது.

தேசிய துப்பறியும் நிருவனம் (NIA); டாக்டர் ஸாகிர் நாயக்கின் Video - Audio என்பவற்றை ஆராய்ந்து வருவதாகவும், இதன் மூலம் அவரை சட்டத்தின்முன் குற்றவாளி ஆக்கக்கூடிய ஆதாரங்களை தேடி வருவதாகவும் இந்த காவி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனை எதிர்க்கும் வகையில் கீழ்வரும் இணைப்பை அழுத்தி  இந்திய ஊடக சம்மேளனத்திற்கு உங்களது எதிர்ப்பை தெரிவியுங்கள். (Petteion) https://www.change.org/p/press-council-of-india-indian-medi…

இதனை அதிகமதிக Share செய்வதன் மூலம் அனைவருக்கும் கொண்டுசெல்லுங்கள்......

No comments

Powered by Blogger.